
வேளச்சேரியில் போதையில் இருந்த நபரைச் சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியதில் மிகப்பெரிய போதை மாத்திரை விற்கும் கும்பல் சிக்கியது. ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளைக் கைப்பற்றிய போலீஸார் 4 பேரைக் கைது செய்தனர்.
சென்னையில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து, இதைக் கட்டுப்படுத்த காவல் ஆணையர் உத்தரவின்பேரில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அடையாறு துணை ஆணையர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனிப்படை போலீஸாரில் ஒரு பிரிவினர் வேளச்சேரி பேபி நகரில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதையில் தள்ளாடியபடி வந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்