
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியைக் கடந்தது. இதனால், அருவிக்கு செல்லும் நடை பாதை தண்ணீரில் மூழ்கியது.
கர்நாடக மாநிலம் கபினி அணை நிரம்பியதைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல, கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் நீர்வரத்துக்கு ஏற்ப காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்