
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை செய்யப்பட்ட கைதி முத்துமனோவின் உடலை, மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவைத் தொடர்ந்து, 71 நாட்களுக்குப் பிறகு அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
திருநெல்வேலி அருகே உள்ளவாகைக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துமனோ. கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இவர், கடந்த ஏப்ரல் 22-ம்தேதி பாளையங்கோட்டை மத்தியசிறையில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்