
தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டுமென, கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று வந்த கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்த தானக் கழகம் ஆகியவை இணைந்து, கோவிட் தடுப்பு உதவி மையம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை அரசு மருத்துவமனைக்கு வழங்கியிருந்தன. இந்த கருவிகளை இயக்கி வைத்ததுடன், தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் (டிசிஓஏ) மூலம் வழங்கப்பட்ட ரூ.1.20 லட்சம் மதிப்பிலான ஆறுஸ்ட்ரெச்சர்களையும் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசனிடம் அவர் ஒப்படைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்