
தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. இருப்பினும், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தாம்பரம் - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத அந்த்யோதயா ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்