
பட்டுக்கோட்டை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக சேரும் மாணவரின் பெயரில் ரூ.1,000 வைப்புத் தொகையும், குலுக்கலில் பெற்றோருக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 55 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், முன்னாள் மாணவர்கள் 10 பேர், தலைமையாசிரியர் சரவணனுடன் இணைந்துபுதிதாக சேரும் மாணவர்களுக்கு பரிசுகள், சலுகைகளை வழங்கி அரசுப் பள்ளியில் தங்களின் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்