
திருவெண்ணெய்நல்லூர் அருகே வளையம்பட்டு, மே லமங்கலம், செம்மார், எரலூர், ஏனாதிமங்கலம், சிறுவானூர், ஏமப்பூர், மழவராயனூர், சிறுமதுரை, டி.எடையார், பனபாக்கம் மற்றும் அண்டராயனூர் ஆகிய கிராமங்களில் ‘உங்கள் தொகுதியில் முதல்வரின் துறை’ திட்டத்தின் கீழ் அமைச்சர் பொன்முடி நேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டார்.
சிமெண்ட் சாலைகள் அமைத்தல், தானிய களம், மயானம் அருகில் சாலை மேம்பாடு, கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சமுதாய கிணறு போன்றவைகள் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்