
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதியோர் மற்றும் விதவை உதவித் தொகைக்கான ஆணை மற்றும் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்களை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வழங்கினார்.
திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கொடியூர், அத்தண்டமருதூர், வடமருதூர் ஆகிய கிராமங்களில் ஏற்கெனவே, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்