
செங்கம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கால்வாயில் வீணாக கலப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்க கடந்த 2010-ம் ஆண்டு சாத்தனூர் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. செங்கம் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சிகளுடன் செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள 40 வழியோர கிராமங்கள் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டது. வரும் 2040-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி மேற்கண்ட பேரூராட்சி மற்றும் கிராமங்களின் மக்கள் தொகை சுமார் 71 ஆயிரம் என்பதால் 30.65 லட்சம் குடிநீர் தேவை இருக்கும் என கணக்கிடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்