
தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இன்று முதல் 200 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, புதுச்சேரிக்கான பேருந்து சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்