
பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் கடந்த 2011 முதல் 2021-ம் ஆண்டு வரை உள்ள பெட்ரோல், டீசல் விலைப்பட்டியலை ஏணி வடிவில் பதாகைகள் மூலம் வடிவமைத்தும், சமையல் காஸ் விலை உயர்வைக் குறிப்பிடும் வகையில் செங்கல்லில் அடுப்பு போல் வடிவமைத்து விறகு வைத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்