
நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தை, அங்கு செயல்பட அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் தாமரைக்கேணி என்ற நீர்நிலையை ஆக்கிரமித்து புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு சிஎம்டிஏ ஒப்புதல் பெறவில்லை. எனவே செம்மஞ்சேரி காவல் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும். நீர்நிலையை பழைய நிலைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்