
சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதி, பரங்கிமலை கிழக்கு ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது. இதில் அதிமுகஇலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி பங்கேற்று உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், அம்மா பேரவை துணை செயலாளரும், ஒன்றிய செயலாளருமான பெரும்பாக்கம் இ.ராஜசேகர், மாணவரணி மாநில துணை செயலாளர் சி.மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்