
கோவை மாவட்ட வனவியல் விரிவாக்க கோட்டத்தின் மூலம்வேளாண் காடுகள் திட்டத் தின் கீழ் விவசாயிகள் இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வனவியல் விரிவாக்க கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், 1,95,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க தயார் நிலையில் உள்ளன. ஆர்வமுள்ள கோவை மாவட்ட விவசாயிகள் வன அலுவலர்களை தொடர்பு கொண்டு தேக்கு, மலைவேம்பு, மகாகனி, செம்மரம், புளி, வில்வம், நீர்மருது, வாகை, சந்தனம், வேங்கை, நெல்லி, ஈட்டி, பலா, புங்கன், வேம்பு மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்