
கரோனா தொற்றின் 3-வது அலையை எதிர்கொள்வதற்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கென 15 படுக்கை கொண்ட அதிநவீனசிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைப் பிரிவை சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். மருத்துவமனை டீன் ஜெயந்தி உடனிருந்தார். அப்போது ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் 34 மாவட்டங்களில் 100-க்கு கீழ் கரோனா தொற்று உள்ளது.4 மாவட்டங்களில் 100-க்கு மேல் தொற்று பதிவாகிறது. கூட்டத்தை தவிர்ப்பது, முகக்கவசம் அணிவது போன்றவற்றை பின்பற்றாததால் சென்னை, ஈரோடு,தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்றமாவட்டங்களில் தொற்று அதிகமாகிறது. இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குவது வருத்தம் அளிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்