
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்கக்கோரி செய்யாறு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழவர் பேரவை சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “செய்யாறு, வெம்பாக்கம் மற்றும் வந்தவாசி வட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படடிருந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெறுகிறது. கடந்த ஜுலை 10-ம் தேதி தொடங்கிய, இந்த பணி 3 வாரங்களில் முடிவுக்கு வந்து விடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்