
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக பாசன நீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அமைச்சர்கள் இ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், பி.மூர்த்தி ஆகியோர் மதகை இயக்கி நீரை திறந்து வைத்தனர். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் க.வீ.முரளிதரன், எஸ்.அனீஷ்சேகர், எஸ்.விசாகன், ப.மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விநாடிக்கு 1,130 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்