
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மேலாளர் சுமதி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, மக்கள் போராட்டத்தால் 2018 ஏப்ரலில் மூடப்பட்டு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. அவசரப் பணிக்காக குறைந்த அளவு மின்சாரம் விநியோகம் செய்ய விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இந்நிலையில் கரோனா 2-ம் அலை பரவலின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டது. அதன்படி 2132.64 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன், 7833 மெட்ரிக் கியூப் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்