
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் கா.மு.சுரேஷ். இவர் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளராக இருந்தார். 2011-ல் இவரை சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இதுதொடர்பாக, ஆறுமுகநேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின்பேரில்தான் தன்னைக் கொலை செய்ய அவர்கள் முயன்றதாக, சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 7-வது நபராக சேர்க்கப்பட்டார். வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்