
மைசூர் தொல்லியல் அலுவலகத்தில் உள்ள படியெடுத்த கல்வெட்டுகளை, தமிழகத்திடம் ஒப்படைக்கும்படி கேட்டுள்ளோம் என தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மைசூரிலுள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் தமிழ் கல்வெட்டுகளை பாதுகாப்பதற்கு பதிலாக, தமிழகத்திலேயே பாதுகாக்கலாமே? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்