
சென்னையை சேர்ந்த சின்னத் திரை நடிகர் பஞ்சாபகேசன் (85), அவரது மனைவி கவுரி ஆகியோருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் செங்கல்பட்டு அருகே வள்ளிபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும். இந்த நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து திருக்கழுக்குன்றம் சார்-பதிவாளர் அலுவலகம் மூலம் பத்திரப் பதிவு செய்துள்ளனர்.
எனவே, இதை மீட்டுத் தரும்படி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கே.பொன்னுசாமி தலைமையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு காவல் ஆய்வாளர் டி.கே.குமரன், உதவி ஆய்வாளர்கள் சசிகுமார், ஜெயமோகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்