
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் பசுமை பண்ணை காய்கறி கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கடையில் இருந்து தாம்பரம் நகராட்சியில் செயல்படும் 2 அம்மா உணவகங்களுக்கு தேவையான காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில் தாம்பரம் நகராட்சி நிர்வாகம், காய்கறி வாங்கியதற்கான கட்டணத்தை பசுமை பண்ணை காய்கறி கடைகளுக்கு சரிவர செலுத்தாததால் காய்கறி வழங்குவது நிறுத்தப் பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்