
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சில பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்தது.
நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (சென்டி மீட்டரில்): திருவள்ளூர் 13.5, தாமரைப்பாக்கம் 9.7, பூண்டி 9.1, பள்ளிப்பட்டு 9, சோழவரம் 6.8, பூந்தமல்லி 5.2, திருத்தணி 4.1, திருவாலங்காடு 3.5, ஜமீன் கொரட்டூர் 3.4, ஊத்துக்கோட்டை 3, கும்மிடிப்பூண்டி 2.5, பொன்னேரி 2, செங்குன்றம் 1.7, ஆர்.கே.பேட்டை1.5. மாவட்டத்தில் சராசரியாக 5.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்