
காஞ்சிபுரத்தில் ஏனாத்தூர் பகுதியில் உள்ள நகராட்சி குடியிருப்பு பகுதிகளை தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் நேற்று ஆய்வுசெய்தார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆணையத்தலைவர் எம்.வெங்கடேசன்தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் விடாமல் அரசே எடுத்து செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்