Sunday, August 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/23/large/707949.jpgதடுப்பூசி போடாமல் நாட்டு மருந்து கொடுத்துள்ளனர்; வெறிநாய் கடித்ததில் ரேபீஸ் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு

பூந்தமல்லி நசரத்பேட்டையை அடுத்த அகரமேல் பகுதியில் கடந்த மாதம் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் அந்த வழியாக சென்ற 5 சிறுவர்களை கடித்துள்ளது. இதில், 4 சிறுவர்களுக்கு வெறிநாய்க்கடி நோய் (ரேபீஸ் நோய்) தாக்காமல் இருக்க அவர்களின் பெற்றோர் தடுப்பூசிகளை போட்டுள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ் என்பவரின் 7 வயது மகன் மோனிஷின் முகம் உள்ளிட்ட பல இடங்களில் நாய் கடித்திருந்தும் தடுப்பூசி போடாமல் நாட்டு மருந்து கொடுத்துள்ளனர். ஒரு மாதத்துக்கு பிறகு, சிறுவனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவனை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், சிறுவனுக்கு ரேபீஸ் நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...