
கொரட்டூர் ஏரியில் கழிவுநீரை விட்டு மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு துறைகளுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கொரட்டூர் ஏரியில் கழிவுநீரை விட்டு மாசுபடுத்துவதாகவும், அந்த ஏரி ஆக்கிரமிப்பில் சிக்கி இருப்பதாகவும் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்