
கரோனா தொற்று கட்டுப்பாடுகளால் வீட்டிலிருந்தபடியே பங்கேற்று பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘வர்மம் தெரபி’ எனும் ஆன்லைன் பயிற்சி ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெற உள்ளது.
கரோனா தொற்றைத் தடுக்கும்விதமாக பலரும் வீடுகளிலேயே இருக்கிறார்கள். இந்நிலையில், அனைவருக்கும் பயன்படத்தக்க வகையில், ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘வர்மம் தெரபி’ எனும் ஆன்லைன் பயிற்சியை 5 நாட்கள் நடத்துகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்