
நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கரோனா தொற்றுஇல்லை (நெகட்டிவ்) என்பதற்கான சான்றிதழ் அல்லது 2 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கடந்த 5-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் இல்லாதவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காக, ரயில், விமான நிலையங்கள், எல்லைப் பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்