
சென்னையில் பல ஆண்டுகளாக கிடப்பிலுள்ள துறைமுகம் - மதுரவாயல் இடையிலான 2அடுக்கு மேம்பாலப் பணிகளை மேற்கொள்ள விரைவில்நிறுவனத்தை தேர்வு செய்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வரும் வாகனங்கள், பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்கின்றன. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை பறக்கும் விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு கடந்த 2010-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்