
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகரை பெங்களூருவில் தமிழகசிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
நீட் தேர்வில் கடந்த 2019-ம்ஆண்டு ஆள்மாறாட்டம் செய்துதமிழக மருத்துவக் கல்லூரிகளில் பலர் சேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவரும், அவரது தந்தையும் முதலில் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் இதுவரை 5 மாணவர்கள், அவர்களது பெற்றோர், 2 இடைத் தரகர்கள் என 17 பேர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்