
தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் அதற்கு இணையான பதவியில் (துணை இயக்குநர்) உள்ள 37 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆ.அனிதா, ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அதிகாரியாகவும், செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஜே.ஆஞ்சலோ இருதயசாமி, கடலூர் முதன்மைக் கல்வி அதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்