
தாழம்பூர் வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட ரூ.13 கோடி மதிப்புள்ள (ஆம்பர் கிரீஸ்) எனப்படும் திமிங்கல கொழுப்பை பறிமுதல் செய்த வனத்துறையினர், கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாழம்பூர் வனப்பகுதியில் பல்வேறு சட்ட விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், இந்த வனப்பகுதியில் பல்வேறு மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படும் திமிங்கலத்தின் கொழுப்பை (ஆம்பர் கிரீஸ்) கடலூரைச் சேர்ந்த கடத்தல்கும்பல் ஒன்று பெங்களூர் - கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கும்பலுக்கு விற்பனை செய்வதற்காக வனப்பகுதிக்கு வருவதாக, வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்