
சென்னை மாநகரப் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என 100 சதவீதம் வகை பிரித்து பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், திடக்கழிவு மேலாண்மைக்கான மாநில கண்காணிப்பு குழுத் தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு சார்பில் திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் திடக்கழிவு மேலாண்மைக்கான மாநில கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்