
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவாக பன்னாட்டு இணையவழி இரண்டாம் ஆண்டு மெய்நிகர் மாரத்தான் போட்டி ஆகஸ்ட் 7-ம் தேதி (இன்று) தொடங்குகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 28 நாடுகளைச் சேர்ந்த 8,541 பேர் பங்கேற்றனர். பதிவுக் கட்டணமாக கிடைத்த ரூ.23.41 லட்சம் கரோனா பேரிடர் நிதிக்காக அளிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்