
கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 3-வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
கோவை இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்த சசிகுமார்(37), கடந்த 2016 செப்டம்பர் 22-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக துடியலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். பின்னர் இந்த கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்