
முன்னாள் அதிமுக அமைச்சர்எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக இருந்த அரசு ஒப்பந்ததாரரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும்அவருடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த10-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான சொத்துஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள், வங்கி கணக்கு ஆவணங்கள், ரூ.2 கோடி வைப்பு நிதி ஆவணம், வங்கி லாக்கர் சாவிகள், ரூ.13 லட்சம் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்