
வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தருவதாக மக்களிடம் பணம் வசூலில் ஈடுபடும் போலி சமூக ஆர்வலர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பொருளாதார இழப்பை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெரும்பாலும் இலவச வீட்டுமனை, குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கோரி குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து பொதுமக்கள் வருவார்கள். ஆனால், நேற்று ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்புக்கு உள்ளானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்