
மகப்பேறு சிகிச்சையை அரசு மருத்துவக் காப்பீட்டில் இணைப்பதோடு, திருமண முன் பணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகள் குறித்த அறிவிப்புநிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. அகவிலைப்படி உயர்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன நிலையில், மகப்பேறு கால விடுப்பு 3 மாதம் அதிகரிப்பு, பணியில் இருக்கும் போது இறக்கும் அரசு ஊழியரின் குடும்ப நல நிதி உயர்வு ஆகியவை மட்டுமே அரசு ஊழியர்களுக்கான சலுகை அறிவிப்பாக வெளியாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்