
நாமக்கல் நகர பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் நாமக்கல்லில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவரான முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் மீதான கடனை அடைக்க திமுக தலைமையிலான அரசு கடமைப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் வழங்கிய 520 வாக்குறுதிகளில் ஒன்று, இரண்டை நிறைவேற்ற முயற்சி செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்