
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரை மற்றும் செம்மொழிப் பூங்கா உள்ளிட்டவை நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளே அவற்றில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் வெகுவாகக் குறைந்துவருகிறது. இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருந்தாலும், பொது இடங்களில் மக்கள் கரோனா பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன், பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்