
வீட்டிற்கு வந்து கணக்கீடு செய்யாமலேயே, மின் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், உளுந்தூர்பேட்டை மின்பகிர்மானக் கழகத்திற்குட்ட பகுதிகளில் மின் கட்டணம் மிகையாக உள்ளதாக பயனீட்டாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
உளுந்தூர்பேட்டையில் வசிப்பவர்களுக்கு கடந்த ஜூன், ஜீலை மாதங்களுக்கான மின் பயன்பாட்டுக் கட்டணத்தை குறிப்பிட்டு, அவரவர் செல்போன்களுக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளன. அதில், சிலருக்கு வழக்கமாக செலுத்தும் கட்டணத்தை விட6 மடங்கு வரை கூடுதலாக வந்து,அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் சிலருக்கு 2 முதல் 3 மடங்கு வரை கட்டணம் கூடுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்