
கடந்த சில ஆண்டுகளில் கழிவு நீர் குட்டையாகிப் போன விருத்தாசலம் மணிமுக்தாறு, மேலும் மேலும் மோசமான நிலையை நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கிறது. மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு, மணிமுக்தாற்றைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வழியாக மணிமுக்தா ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் ஒருபுறத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயிலும் கிழக்குப் புறத்தில் வணிக வளாகங்களும் உள்ளன. இந்த ஆற்றின் சுற்று வட்டாரப் பகுதியில் விருத்தாசலம் ஜங்ஷன் சாலை மற்றும் கடைவீதி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இதுதவிர சேலம் சாலையிலும் தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்