
கென்யா தலைநகர் நைரோபியில் நடந்த உலக இளையோர் தடகளப் போட்டியில் விழுப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் பரத் ஸ்ரீதரன்வெண்கலப் பதக்கம் வென்றுள் ளார். அவருக்கு மாவட்ட நிர்வாகம்சார்பில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.
கென்யா தலைநகர் நைரோபி யில் நடந்த 20 வயதுக்கு உட்பட்ட (யு 20) உலக இளையோர் தடகளப் போட்டியில் இந்தியா 5 பதக்கங்களைக் குவித்துள்ளது. இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த பரத் ஸ்ரீதரன், கலப்பு 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு, வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்