
மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை, குண்டாறு, ராமநதி, வெலிங்டன் அணைகள், காவேரிப்பாக்கம் ஏரியின் கொள்ளளவு மீட்கப்படும். பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 23 மாவட்டங்களில் 200 குளங்கள் சீரமைக்கப்படும் என்று பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. பின்னர், இதற்கு பதில் அளித்து துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்