
ஆசியாவில் மிகப்பெரிய அளவி லான தொழிற்பூங்கா கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து விரைவில் அமைக்கப்படவுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் தமிழகதொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கோவை கோயிண்டியா வளாகத்தில் நேற்றுநடைபெற்றது. தொழில் துறை செயலர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை செயலர் வி.அருண்ராய், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற னர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்