
நியாயவிலைக் கடை அரிசி கடத்தப்பட்டு, திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் சிலநிறுவனங்களின் உணவகங்களில் சமைக்கப்படுவது போலீஸாரின்விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருப்பூர் செரங்காடு பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அருகே, ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பூர் குடிமைப்பொருள் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில், குடிமைப்பொருள் பறக்கும்படை வட்டாட்சியர் சுந்தரம் தலைமையிலான அதிகாரிகள், செரங்காடு பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்