
பாவாணரின் அண்ணன் மகன்வழிப் பேத்திக்கு உரிய உதவிவழங்கப்படும் என்று தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்துள்ள நிலையில், பாவாணரின் நேரடிக் கொள்ளுப்பேரன், இறந்ததனது தந்தையின் வாரிசு வேலைக்காக 20 ஆண்டுகளாக போராடும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மொழிகளிலேயே மூத்தமொழி தமிழ் என்பதை தன்னுடைய வேர்ச்சொல் ஆராய்ச்சியின் மூலம் நிறுவியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். அவரது அண்ணன் குருபாதம் வழிப் பேத்தி ரச்சேல் ஜெமிம்மா(75). இவர் வறுமையால் கையேந்தும் நிலையில் இருக்கும் தகவல் தெரியவந்ததும், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவரை நேரில் வரச்சொல்லி குறைகளைக் கேட்டறிந்ததுடன், அரசு சார்பில் உதவிகள் செய்வதாக வாக்குறுதியும் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்