
புதுச்சேரி நகரின் அழகை கெடுத்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைப்பது அதிகரித்துள்ளது. இதை புதுச்சேரி அரசு கண்டுகொள்வதில்லை. அதிகாரிகளும் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் மவுனம் காக்கின்றனர்.
புதுச்சேரியில் பொது இடங்க ளில் பேனர்கள், பிளெக்ஸ் போர்டு, கட்அவுட் ஆகியவை வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை அதை நடைமுறைப்படுத்து வதில்லை. கடந்த 2016-ல் புதுச் சேரியில் 20 இடங்களில் கட்டணம் செலுத்தி பேனர் வைக்க அனுமதி தரப்பட்டது. அதை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பேனர் கள் அகற்றப்பட்டன. ஆனால் அதிகாரிகள் இதை சரியாக நடை முறைப்படுத்துவதில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்