
வட சென்னை பகுதியில் மின் தடை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், அப்பகுதியில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மின் சேவை தொடர்பாக புகார் அளிக்க வசதியாக அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தை புதன்கிழமை இரவு 11 மணிக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில்ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களின் புகார் அழைப்புகளை அமைச்சரே கேட்டறிந்தார். அதில்,வட சென்னை பகுதியில் மின்தடை ஏற்பட்ட நிலையில், புகார்அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என புகார்கள் வந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்