
செவ்வாய் கிரகத்திலிருந்து மார்ஸ் ரோவர் கருவி, பூமிக்கு அழகிய புகைப்படங்களை எடுத்து அனுப்பி யுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமானநாசா, செவ்வாய் கிரகத்துக்கு கடந்த ஆண்டு விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலமானது கடந்த பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்துக்கு சென்றடைந்தது. அந்த விண்கலத்திலிருந்து பிரிந்த பெர்சவரன்ஸ் ரோவர் கருவி செவ்வாயில் பத்திரமாக தரையிறங்கியது. சக்கரங்களைக் கொண்ட அந்தக் கருவி, செவ்வாய் கிரகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்